ADDED : ஜன 23, 2024 11:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : தைப்பூசம் விழாவையொட்டி அரியாங்குப்பம் பகுதியில் நாளை இறைச்சி கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
தைப்பூசம் விழா நாளை 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட அரியாங்குப்பம் மீன் மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து, ஆடு, மாடு, கோழி, மீன், பன்றி ஆகிய இறைச்சி கடைகள் மூடப்பட வேண்டும். மீறி இறைச்சி கடைகளை திறந்து வியாபாரம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, ஆணையர் தெரிவித்துள்ளார்.

