/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
15 நீதிபதிகளுக்கு பணி ஆணை முதல்வர் ரங்கசாமி வழங்கல்
/
15 நீதிபதிகளுக்கு பணி ஆணை முதல்வர் ரங்கசாமி வழங்கல்
15 நீதிபதிகளுக்கு பணி ஆணை முதல்வர் ரங்கசாமி வழங்கல்
15 நீதிபதிகளுக்கு பணி ஆணை முதல்வர் ரங்கசாமி வழங்கல்
ADDED : பிப் 02, 2024 03:38 AM

புதுச்சேரி: புதிய நீதிபதிகளுக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
உரிமையியல் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்ற புதுச்சேரியை சேர்ந்த 9 வழக்கறிஞர்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த 6 வழக்கறிஞர்கள் என, மொத்தம் 15 வழக்கறிஞர்கள் நீதிபதிகளாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவர்களுக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் ரங்கசாமி சட்டசபை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று வழங்கினார். புதுச்சேரியில் இருந்து முதல் முறையாக 9 நீதிபதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதுவும் கிராமப்புறங்களில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது மகிழ்ச்சியளிக்கிறது என, முதல்வர் பாராட்டினார். சபாநாயகர் செல்வம், சட்ட அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு கொறடா ஆறுமுகம், சட்டத் துறை சார்புச் செயலர் ஜான்சி உடனிருந்தனர்.

