sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பஸ் மோதி கல்லுாரி மாணவர் பலி

/

பஸ் மோதி கல்லுாரி மாணவர் பலி

பஸ் மோதி கல்லுாரி மாணவர் பலி

பஸ் மோதி கல்லுாரி மாணவர் பலி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தனியார் பஸ் மோதி படுகாயமடைந்த கல்லுாரி மாணவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

வில்லியனுார் அடுத்த வி.மணவெளி, தண்டுகார வீதியை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் கணேஷ், 19; இவர், தனியார் கல்லுாரியில் விவசாயம் முதலாமாண்டு படித்தார்.

இவரது சகோதரி திரிபுரசுந்தரி, 21; மருத்துவம் படித்து முடித்து, காலாப்பட்டு தனியார் மருத்துவ கல்லுாரியில் பயிற்சி எடுத்து வருகிறார்.

கடந்த 4ம் தேதி திரிபுரசுந்தரியை பஸ் ஏற்றி விடுவதற்கு வீட்டில் இருந்து கணேஷ் மொபட்டில் அழைத்து சென்றார்.

மூலக்குளம் அருகே சென்றபோது, அவ்வழியாக வேகமாக சென்ற தனியார் பஸ், மொபட் மீது மோதியது. கணேஷ், திரிபுரசுந்தரி படுகாயமடைந்தனர்.

புதுச்சேரி ஜிப்மரில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி கணேஷ் இறந்தார். திரிபுரசுந்தரி சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து குறித்து, வடக்கு பகுதி போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar