ADDED : ஜன 23, 2024 11:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : ஏரிப்பாக்கம் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் கட்டுமான பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார்.
நெட்டப்பாக்கம் தொகுதி, ஏரிப்பாக்கம் பழைய காலனியில் உள்ள பழமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோவில், பழுதடைந்திருந்தது. இதனை இடித்து அகற்றி, புதிய கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது.அதன்படி, கோவில் கட்டும் பணி நேற்று துவங்கியது. இப்பணியினை துணை சபாநாயகர் ராஜவேலுபூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

