sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மின்துறை அலுவலகம் முற்றுகை

/

மின்துறை அலுவலகம் முற்றுகை

மின்துறை அலுவலகம் முற்றுகை

மின்துறை அலுவலகம் முற்றுகை


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பதவி உயர்வு வழங்க கோரி மின்துறை ஐ.டி.ஐ., நலச்சங்கத்தினர், மின்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மின்துறையில் பணியாற்றும் ஒயர்மேன்களுக்கு, உதவி லைன் இன்ஸ்பெக்டர் (ஏ.எல்.ஐ.) பதவி உயர்வு வழங்கக் கோரி ஐ.டி.ஐ. நலச்சங்கத்தினர் கடந்த டிசம்பர் மாதம் மின்துறை அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது, புத்தாண்டு மற்றும் பொங்கலுக்கு முன்னதாக பதவி உயர்வு வழங்க மின்துறை ஒப்புக் கொண்டது.

இதுவரை பதவி உயர்வு வழங்காததால் பலர் ஓய்வு பெறும் நாளை நெருங்கி கொண்டிருக்கின்றனர்.

எனவே, உடனடியாக பதவி உயர்வு வழங்க கோரி மின்துறை ஐ.டி.ஐ., நலசங்கத்தினர் நேற்று காலை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்க தலைவர் அருள்மொழி, பொதுச்செயலாளர் ரவி தலைமை தாங்கினர்.கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், விரைவில் பதவி உயர்வு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தார்.

அதை ஏற்று மின்துறை ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar