Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு 

மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு 

மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு 


ADDED : செப் 28, 2025 11:10 PM

Follow on Google

ADDED : செப் 28, 2025 11:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: செல்லிப்பட்டில் சூறைகாற்றுடன் பெய்த கனமழையால், பழமையான புளியமரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங் களில் கனமழை பெய்து வருகிறது.

நேற்று முன்தினம் இரவு கருமேகங்கள் சூழ்ந்து தி ருக்கனுார், வம்புப்பட்டு , செல்லிப்பட்டு மண்ணாடிப்பட்டு, திருபுவனை, மதகடிப்பட்டு உள்ளிட்ட கி ராமப் புறங்களில் சூறைக் காற்றுடன் கூடிய கன மழை பெய்தது.

இதில், செல்லிப்பட்டு - திருக்கனுார் செல்லும் சாலையோரம் இருந்த 100 ஆண்டுகள் பழமையான புளியமரம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

மேலும், மரம் விழுந்தபோது, அப்பகுதியில் மின் கம்பிகள் அறுந்ததால், மின்தடை ஏற்பட்டது.

தகவலறிந்த, போலீசார், தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து, சென்று மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap