sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தந்தையை தேடி வந்தபோது சிறுமிக்கு பாலியல் சீண்டல் தந்தை, மகனுக்கு '3 ஆண்டு'

/

தந்தையை தேடி வந்தபோது சிறுமிக்கு பாலியல் சீண்டல் தந்தை, மகனுக்கு '3 ஆண்டு'

தந்தையை தேடி வந்தபோது சிறுமிக்கு பாலியல் சீண்டல் தந்தை, மகனுக்கு '3 ஆண்டு'

தந்தையை தேடி வந்தபோது சிறுமிக்கு பாலியல் சீண்டல் தந்தை, மகனுக்கு '3 ஆண்டு'


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:புதுச்சேரி ரெயின்போ நகரைச் சேர்ந்தவர் வெங்கடாசலம், 58, ஹோட்டல் உரிமையாளர். இவரது மகன் ரக் ஷன், 22, பொறியாளர். இவருக்கும் கோரிமேட்டை சேர்ந்த ஒருவருக்கும் தொழில் ரீதியாக முன்விரோதம் இருந்தது.

கடந்த 2020ம் ஆண்டு வெங்கடாசலம், ரக் ஷன் ஆகியோர் கோரிமேட்டில் இருந்த அந்த நபரின் வீட்டிற்கு சென்றனர். அங்கு, அவரது 15 வயது மகள், வீட்டில் படித்துக் கொண்டிருந்தார்.

அவரிடம், தந்தை குறித்து கேட்டனர். அவர் இங்கு இல்லை என கூறியதை பொருட்படுத்தாமல் தேடினர். தந்தை இல்லாததால், சிறுமியை தாக்கி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர்.

புகாரின்படி, வெங்கடாசலம், ரக் ஷன் ஆகியோரை கைது செய்த கோரிமேடு போலீசார், அவர்கள் மீது புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஷோபனா தேவி, குற்றம் சாட்டப்பட்ட வெங்கடாசலம், ரக் ஷனுக்கு தலா, 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு சார்பில் 1 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.




    • Dinamalar Events


    Dinamalar