sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஈரம் பவுண்டேஷன் நிறுவனர் காங்., கட்சியில் இணைய முடிவு

/

ஈரம் பவுண்டேஷன் நிறுவனர் காங்., கட்சியில் இணைய முடிவு

ஈரம் பவுண்டேஷன் நிறுவனர் காங்., கட்சியில் இணைய முடிவு

ஈரம் பவுண்டேஷன் நிறுவனர் காங்., கட்சியில் இணைய முடிவு


ADDED : ஜன 14, 2024 04:06 AM

Google News

ADDED : ஜன 14, 2024 04:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : ஈரம் பவுண்டேஷன் நிறுவனர் ராஜேந்திரன் தனது தன்னார்வலர்களுடன் காங்., கட்சியில் இணைய முடிவு செய்துள்ளார்.

முத்தியால்பேட்டை தொகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் ஈரம் பவுண்டேஷன் மூலம் பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, மருத்துவ உதவிகள் உள்ளிட்ட சேவைகளை செய்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது தன்னார்வலர்களுடன் காங்., கட்சியில் இணைய முடிவு செய்துள்ளார். அதற்கான அறிமுக கூட்டம் புதுச்சேரி தனியார் ஓட்டலில் நேற்றிரவு நடந்தது.

கூட்டத்தில், ஈரம் பவுண்டேஷன் நிறுவனர் ராஜேந்திரன், காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்., மாநில ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, ஈரம் பவுண்டேஷன் நிறுவனர் ராஜேந்திரன் கூறுகையில், 'ராகுல் எம்.பி., கரத்தை பலப்படுத்துவதற்காக காங்., கட்சியில் இணைய முடிவு செய்துள்ளேன். வரும் லோக்சபா தேர்தலில் புதுச்சேரியில் காங்., வேட்பாளர் வெற்றி பெற, எனது தொகுதியில் கூடுதலாக 5,000 ஓட்டுகள் பெற்று தருவேன்.

மேலும் தொகுதி வாரியாக உள்ள தனது நிறுவன தன்னார்வலர்கள் மூலம் காங்., கட்சி பலத்தை அதிகப்படுத்துவேன் என்றார்.

தொடர்ந்து வைத்திலிங்கம் எம்.பி., கூறுகையில், 'இம்மாத இறுதியில் புதுச்சேரி வரும் காங்., பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் முன்னிலையில், ஈரம் பவுண்டேஷன் நிறுவனர் ராஜேந்திரன் தனது தன்னார்வலர்கள் 2,000 பேருடன் காங்., கட்சியில் இணையும் விழா நடத்தப்படும் என, தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us