sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

எப்.எஸ்.டி.ஏ., பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி

/

எப்.எஸ்.டி.ஏ., பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி

எப்.எஸ்.டி.ஏ., பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி

எப்.எஸ்.டி.ஏ., பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருபுவனை : திருபுவனை எப்.எஸ்.டி.ஏ., மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிபெற்றுள்ளது.

இது குறித்து பள்ளி நிர்வாகி ஜெயவேல், முதல்வர் ஒயிட்தாசன் ஆகியோர் கூறியதாவது;

எமது பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள் 30 பேரும், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாணவி மதுவந்தி 485 மதிப்பெண்களுடன் முதல் இடம் பெற்றார்.

ரித்திஸ்வரன் 467 பெற்று இரண்டாமும், யுவராஜ் 464 பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். அதேபோல் பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வுகளிலும் 100 சதவீதம் தேர்ச்சிபெற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளியில் கிராமப்புற ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு மிக குறைந்த கட்டணத்தில் நகர்புற பள்ளிகளுக்கு இணையான தரமான கல்வியை போதித்து வருகிறோம்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடித்துச் செல்லும் மாணவ-மாணவிகள் எவ்விதமான சிறப்பு பயிற்சியும் பெறாமலேயே நீட்,., ஜெ.இ.இ., உள்ளிட்ட பல்வேறு போட்டித்தேர்வுகளில் வெற்றிபெற்று, உயர்கல்வி பயின்று பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். பள்ளியின் தொடர் வெற்றிக்கு உழைத்த ஆசிரிய பெருமக்கள், ஒத்துழைப்பு நல்கிய பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar