sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

உலா வரும் போலி இன்வெஸ்ட்மென்ட் செயலிகள்: துாண்டிலில் சிக்கினால் அவ்வளவு தான்...

/

உலா வரும் போலி இன்வெஸ்ட்மென்ட் செயலிகள்: துாண்டிலில் சிக்கினால் அவ்வளவு தான்...

உலா வரும் போலி இன்வெஸ்ட்மென்ட் செயலிகள்: துாண்டிலில் சிக்கினால் அவ்வளவு தான்...

உலா வரும் போலி இன்வெஸ்ட்மென்ட் செயலிகள்: துாண்டிலில் சிக்கினால் அவ்வளவு தான்...


ADDED : அக் 20, 2025 10:30 PM

Google News

ADDED : அக் 20, 2025 10:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சமீப காலமாக லோக் ஆப், வி2, வி3 மற்றும் ஷாப்பி பை போன்ற மொபைல் செயலி மூலம் முதலீடு செய்தால், வாரந்தோறும் லாபத் தொகையை தருவதாக வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் லிங்க்குடன் உலா வருகின்றது.

அதனை உண்மை என நம்பி அந்த ஆப்களை டவுன்லோடு செய்து முதலில் சிறிய தொகையினை யாராவது முதலீடு செய்தால் அவ்வளவு தான். நீங்கள் முதலீடு செய்த மொத்த பணமும் போய்விடும் என்று எச்சரிக்கை மணியை எழுப்புகின்றனர் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார்....

இதுபோன்ற புகார்கள் குவிந்து வரும் சூழ்நிலையில்புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:

முதலீடு செயலிகள் விஷயத்தில் ஆரம்பத்தில் எல்லாமே நல்லாவே போகும். 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் அந்த பணத்திற்காக வாரந்தோறும் லாப பணம் வந்து விழும்.

நீங்களும் குஷியில் அதிக முதலீடு செய்து, உங்களுடைய லாபத்தை ஈட்டியப்படியே இருப்பீர்கள். சில வாரங்களில்பல நபர்களை இந்த ஆப் மூலம் சேர்த்துவிட்டால், அதற்கு ஊக்கத்தொகை தரப்படும் என்று ஸ்பெஷல் அறிவிப்பு வரும்.

அதனை ஏற்று உறவினர்கள், நண்பர்கள் போன்ற அனைவருக்கும் அந்த ஆப்பை பற்றி கூறி முதலீடு செய்யுமாறு கூறுகின்றனர்.

அவர்களும் போட்டி போட்டுக்கொண்டு முதலீடு செய்கின்றனர்.பின், ஏராளமான மக்கள் முதலீடு செய்த பின் அந்த ஆப்பை டெலிட் செய்து விடுகின்றனர். அதன்பிறகு தான் சைபர் மோசடி கும்பல் உருவாக்கிய போலி செயலி என்பது தெரிய வருகிறது.

இதுபோன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரூ. 1 கோடிக்கு மேல் முதலீடு செய்து ஏமாந்தது குறித்து போலீசில் புகார்கள் வந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் நைஜீரியா, கம்போடியா நாட்டிலிருந்து இத்தகைய ஆப் உருவாக்கி அங்கிருந்து செயல்படுத்துவது தெரிய வந்துள்ளது.

ஆகவே, பொதுமக்கள் யாரும் ஆன்லைனில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் என வரும் செய்திகளை நம்ப வேண்டாம். தானாக சென்று மாட்டிக்கொண்டு பணத்தை இழக்க வேண்டாம்.

இதுபோன்று சமூக வலைதளங்களில் பல போலி விளம்பரங்கள் உலா வருகின்றது. செயலிகளை முற்றிலும் நம்ப வேண்டாம். சைபர் குற்றம் தொடர்பாக 1930 மற்றும் 0413 -2276144, 94892 05246 எண்களிலும், cybercell-police@py.gov.in, www.cybercrime.gov.inhttps://www.cybercrime.gov.in புகார்களை தெரிவிக்கலாம் என்றனர்.






      Dinamalar
      Follow us