sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

லாரி டிரைவரை தாக்கி பணம் பறிப்பு

/

லாரி டிரைவரை தாக்கி பணம் பறிப்பு

லாரி டிரைவரை தாக்கி பணம் பறிப்பு

லாரி டிரைவரை தாக்கி பணம் பறிப்பு


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி: செப்டிக் டேங்க் லாரி டிரைவர், கிளீனரை தாக்கி மொபைல் போன், பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

காரைக்கால், தைக்கால் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன், 42; செப்டிக் டேங்க் லாரி டிரைவர். இவர், நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில், கிளீனர் குமார், 60, என்பவருடன் போத்திரமங்கலம் சுப்ரமணி என்பவரது வீட்டிற்கு கழிவுநீர் அகற்ற சென்றார்.

அப்போது, முத்துக்குமரன், கிளீனர் குமார் இருவரும் அதே பகுதியில் மது அருந்துவதற்கு லாரியை சாலையோரம் நிறுத்தியுள்ளனர். அவ்வழியே பைக்கில் வந்த மர்ம நபர்கள், இருவரையும் தாக்கியதுடன், கத்தியை காட்டி மிரட்டி, அவர்கள் வைத்திருந்த 2 மொபைல் போன் மற்றும் ரூ.12 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனர்.

முத்துக்குமரன் கொடுத்த புகாரின்பேரில், ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar