sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மாகி பெண் பலாத்கார வழக்கு உடன் தங்கியிருந்தவர் கைது

/

மாகி பெண் பலாத்கார வழக்கு உடன் தங்கியிருந்தவர் கைது

மாகி பெண் பலாத்கார வழக்கு உடன் தங்கியிருந்தவர் கைது

மாகி பெண் பலாத்கார வழக்கு உடன் தங்கியிருந்தவர் கைது


ADDED : ஜன 19, 2024 07:51 AM

Google News

ADDED : ஜன 19, 2024 07:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம், மாகியில் கடந்த 11ம் தேதி லாட்ஜில் தங்கியிருந்த தனது மனைவியை யாரோ பாலியல் பலாத்காரம் செய்ததாக ஜோதிடர் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், மாகி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, மாகி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

லாட்ஜ் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அங்கிருந்து சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த நேரத்தில் அப்பெண் தங்கியிருந்த அறைக்கு லாட்ஜ் ஊழியர்கள் யாரும் செல்லாதது தெரியவந்தது.

அதையடுத்து, போலீசாருக்கு ஜோதிடர் மீது சந்தேகம் வந்தது. போலீசார் ஜோதிடரின் கைரேகையை கொண்டு ஆய்வு செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அவர் கேரள மாநிலம், கண்ணுாரை சேர்ந்த இக்பால், 61, என்பதும் இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் போலீசில் இருப்பதும் தெரியவந்தது.

மேலும், விசாரணையில், மாகியில் கணவர் இல்லாமல் தனியாக இருந்த 51 வயது பெண்ணிடம் பழகி அவரை அழைத்து வந்து, தனது மனைவி எனவும், தான் ஜோதிடர் எனவும் லாட்ஜ் ஊழியரிடம் தகவல் கொடுத்து தங்கியிருந்தனர்.

மது போதையில், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு, லாட்ஜ் ஊழியர்கள் மீது பழி போட்டு திசை திருப்பியது அம்பலமானது. அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, இக்பாலை கைது செய்து, நேற்று கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us