/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மனதின் குரல் நிகழ்ச்சி: 28ம் தேதி ஒலிபரப்பு
/
மனதின் குரல் நிகழ்ச்சி: 28ம் தேதி ஒலிபரப்பு
ADDED : ஜன 26, 2024 12:18 AM
புதுச்சேரி : பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் மனதின் குரல் நிகழ்ச்சி வரும் 28ம் தேதி ஒலிபரப்பாகிறது.
புதுச்சேரி அகில இந்திய வானொலி நிகழ்ச்சி பிரிவு தலைவர் செய்தி குறிப்பு:
பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு ஆற்றும் மன் கீ பாத் நிகழ்ச்சி வரும் 28ம் தேதி காலை 11:00 மணிக்கு ஒலிபரப்பாகிறது. இதனை தொடர்ந்து உடனடியாக மன் கீ பாத் நிகழ்ச்சியின் தமிழ் மொழி பெயர்ப்பு மனதின் குரலாக ஒலிபரப்பாகும். இதன் மறு ஒலிபரப்பு அன்றிரவு 8:00 மணிக்கு செய்யப்படும்.
இந்த இரு நிகழ்ச்சிகளும் புதுச்சேரியில் அகில இந்திய வானொலியின் மத்திய அலை வரிசை 1215 கிலோ ெஹர்ட்ஸ் மற்றும் ரெயின்போ பண்பலை 102.8 மெகா ெஹர்ட்ஸ் அலை வரிசைகளில் ஒலிபரப்பாகும். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

