Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தாய் மாயம் மகன் புகார்

தாய் மாயம் மகன் புகார்

தாய் மாயம் மகன் புகார்


ADDED : ஏப் 15, 2025 04:27 AM

Follow on Google

ADDED : ஏப் 15, 2025 04:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: மனைவியை பிரிந்து வசித்து வரும் மகனின் வாழ்க்கை நினைத்து மன வேதனையில் இருந்து வந்த தாய் காணாமல் போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாகூர் அடுத்துள்ள கடுவனுாரை சேர்ந்தவர் நாகராஜன் 64; பார்வை திறன் இழந்தவர். இவருக்கு, புஷ்பா 53; என்ற மனைவியும், ஜானகிராமன், ராம்குமார் என்ற மகன்களும் உள்ளனர். ராம்குமார் சென்னையில் வேலை செய்து வருகிறார். ஜானகிராமனுக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு குழந்தை உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, கணவன் -மனைவி இருவரும் பிரிந்து தனித்தனியே வசித்து வருகின்றனர்.

இதை நினைத்து, புஷ்பா மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 12ம் தேதி காலை புஷ்பா, தனது கணவர் மற்றும் மகனிடம் இது பற்றி வருதத்துடன் பேசியுள்ளார். அவர்கள் இருவரும், அவரை சமாதானம் செய்து வைத்தனர்.

பின்னர், வீட்டில் இருந்து வெளியே சென்ற புஷ்பா மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap