/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பவழங்குடி சித்தர் குருபூஜை விழா
/
பவழங்குடி சித்தர் குருபூஜை விழா
ADDED : பிப் 01, 2024 11:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: சோம்பட்டுபவழங்குடி சித்தர் ஜீவசமாதியில் குருபூஜை விழா நாளை நடக்கிறது.
திருக்கனுார் அடுத்த சோம்பட்டு கிராமத்தில் பவழங்குடி சித்தர் ஜீவசமாதி உள்ளது. இங்கு சித்தரின் 217வது ஆண்டு குரு பூஜை விழா நாளை (3ம் தேதி) நடக்கிறது.
இதையொட்டி, அன்று காலை 8:00 மணிக்கு முதல் கால யாக வேள்வியுடன் கூடிய சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மகா தீபாராதனை நடக்கிறது.
தொடர்ந்து,மதியம் 1:00மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடக்கிறது.
ஏற்பாடுகளை பவழங்குடி சித்தர் திருத்தொண்டு சபையினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

