தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/போலீசாருக்கு பதவி உயர்வு வழங்கும் விழா

போலீசாருக்கு பதவி உயர்வு வழங்கும் விழா

போலீசாருக்கு பதவி உயர்வு வழங்கும் விழா


ADDED : மார் 13, 2024 06:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2024 06:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி காவல்துறையினர் மற்றும் ஐ.ஆர்.பி.என் படைப் பிரிவினருக்கு சிறப்பு நிலை பதவி உயர்வுகள் வழங்கும் விழா சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் நேற்று நடந்தது.

விழாவை, கவர்னர் தமிழிசை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து, காவல்துறை பிரிவுகளில் 10, 15, 25 ஆண்டுகள் பணி முடித்த காவல்துறை, ஐ.ஆர்.பி.என்., பிரிவினர் 1640 பேக்கு தலைமை காவலர், உதவி சப் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கி, அதற்கான அடையாள சின்னங்கள் ஏற்றி கவுரவித்தார்.

இதில், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், சம்பத் எம்.எல்.ஏ., டி.ஜி.பி., ஸ்ரீநிவாஸ், தலைமை கண்காணிப்பு அதிகாரி சின்ஹா, சீனியர் எஸ்.பி.,க்கள், எஸ்.பி.,க்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us