/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பள்ளியில் ஓவியப்போட்டி மாணவர்களுக்கு பரிசு
/
பள்ளியில் ஓவியப்போட்டி மாணவர்களுக்கு பரிசு
ADDED : செப் 24, 2025 08:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த ஓவியப்போட்டியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
வல்லபாய் பட்டேல் பிறந்த நாளையொட்டி, அரியாங்குப்பம் போலீசார் சார்பில், அரியாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார். போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
அதனை தொடர்ந்து, போலீசார் சார்பில், மாணவர்களுக்கு இலசவமாக நோட், பேனா வழங்கினர். நிகழ்ச்சியில், ஏ.எஸ்.ஐ., சக்திவேல், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.