/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் ஆண்டு விழாவில் ருத்ராபிேஷகம்
/
பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் ஆண்டு விழாவில் ருத்ராபிேஷகம்
பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் ஆண்டு விழாவில் ருத்ராபிேஷகம்
பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் ஆண்டு விழாவில் ருத்ராபிேஷகம்
ADDED : ஜன 26, 2024 05:30 AM

புதுச்சேரி : பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலின் கும்பாபிேஷக 11ம் ஆண்டு விழாவை முன்னிட்டு ருத்ராபி ேஷகம் நேற்று நடந்தது.
புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலை, வானுார் இரும்பை, குபேரன் நகரில் அமைந்துள்ள பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலின் கும்பாபிேஷக 11ம் ஆண்டு விழா நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று காலை இரண்டாம் கால மூல மந்திர ஜபம், ஏகாதச மஹன்யாஸ ருத்ராபிேஷகம், தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து மாலை மூன்றாம் கால மூல மந்திர ஜபம், ஹோமம், தீபாராதனை, கன்யா பூஜை, தருணி, சுமங்கலி, சுவாசினி, பிரம்மச்சாரி, வடுக பூஜைகள் நடந்தது.
இன்று 26ம் தேதி 4ம் கால பூஜை, மூல மந்திர ஹோமம், மகா அபிேஷகம், கலசாபிேஷகம், பாலா திரிபுரசுந்தரி அம்பாளுக்கு நைவேத்திய உபசாரம், தீபாராதனை, மாலை 6:00 மணிக்கு மேல் மூலவர் சிறப்பு அலங்காரம், நவசக்தி அர்ச்சனை, தீபாராதனை, உற்சவம் ஆலய உட்புறப்பாடு நடக்கிறது.

