Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 3 பேருக்கு எஸ்.பி.,யாக பதவி உயர்வு

3 பேருக்கு எஸ்.பி.,யாக பதவி உயர்வு

3 பேருக்கு எஸ்.பி.,யாக பதவி உயர்வு


ADDED : ஆக 21, 2025 08:55 AM

Follow on Google

ADDED : ஆக 21, 2025 08:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி காவல்துறையில் அடாக் அடிப்படையில் மூன்று பேருக்கு எஸ்.பி.,க்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி காவல்துறையில் சி.டி.சி., எனும் பொறுப்பு அடிப்படையில் எஸ்.பி.,க்களாக பதவியேற்று பணியாற்றி வரும் கடலோர பாதுகாப்பு பிரிவு பழனிவேல், புதுச்சேரி பல்கலைக்கழக சிறப்பு பணி அதிகாரி முருகையன் ஆகியோருக்கு அடாக் அடிப்படையில் எஸ்.பி.,களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், சிறப்பு அதிரடி படை பிரிவில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் வரதராஜனுக்கு அடாக் அடிப்படையில் எஸ்.பி.,யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. சி.டி.சி., எனும் பொறுப்பு அடிப்படையில் மேல் பதவியில் பணி புரிந்தாலும், அந்த பணிக்காலம் கணக்கில் எடுத்து கொள்ளப்படாது.

இதன் காரணமாகவே அடாக் எனும் தற்காலிக அடிப்படையில் எஸ்.பி.,களாக நேரடியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கான உத்தரவை கவர்னர் அறிவுறுத்தலின் பேரில், தலைமை செயலர் சரத் சவுகான் வெளியிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap