தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கடற்கரையில் கற்கள் கொட்டும் பணி துவக்கம்

 கடற்கரையில் கற்கள் கொட்டும் பணி துவக்கம்

 கடற்கரையில் கற்கள் கொட்டும் பணி துவக்கம்


ADDED : மார் 14, 2026 05:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2026 05:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வைத்திக்குப்பத்தில் கடல் அரிப்பை தடுக்கும் பொருட்டு, கடலோர பாதுகாப்பு கற்கள் கொட்டும் பணிகளை அமைச்சர் லட்சுமிநாராயணன் துவக்கி வைத்தார்.

ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட வைத்திக்குப்பம், குருசுகுப்பம் மீனவ கிராமங்களில் கடல் அரிப்பைத் தடுக்கும் பொருட்டு, பொதுப்பணித்துறை மூலம் ரூ. 46 லட்சத்து 38 ஆயிரத்து 691 மதிப்பில் கடலோர பாதுகாப்பிற்கு கற்கள் கொட்டும் பணி துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.

விழாவிற்கு, அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து கற்கள் கொட்டும் பணியை துவக்கி வைத்தார். தொடர்ந்து, இப்பணிகள் நிறைவேற்றப்பட்டால் கடல் அரிப்பால் பாதிக்கப்படும் கடற்கரை பகுதிகள் பாதுகாக்கப்பட்டு, மீனவ மக்களின் வாழ்க்கை மற்றும் சொத்துகள் பாதுகாக்கப்படும்' என்றார்.

இதில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜகுமார், உதவி பொறியாளர் லுாயிஸ், வைத்திக்குப்பம் மீனவ சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us