/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்
/
மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: நெல்லித்தோப்பு, பெரியார் நகர் அரசு ஆரம்பப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்தை துணை இயக்குநர் செல்வி கொடி அசைத்து துவக்கி வைத்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜமாலுதீன் தலைமை தாங்கினார்.
ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி, ஆசிரியர்கள் பிரேமலதா, புஷ்பவல்லி, தீபகுமாரி, ஜெயசுதா, சத்யகலா மற்றும் பள்ளி ஊழியர்கள் அல்லி, எலிசா ஆகியோர் செய்திருந்தனர்.
நெல்லித்தோப்பு முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவர்கள் கல்வியின் முக்கியத்துவம், பள்ளியின் சிறப்புகளை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.

