/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேத்தாம்பாக்கம் அரசு பள்ளிக்கு மின்சாதன பொருட்கள் வழங்கல்
/
தேத்தாம்பாக்கம் அரசு பள்ளிக்கு மின்சாதன பொருட்கள் வழங்கல்
தேத்தாம்பாக்கம் அரசு பள்ளிக்கு மின்சாதன பொருட்கள் வழங்கல்
தேத்தாம்பாக்கம் அரசு பள்ளிக்கு மின்சாதன பொருட்கள் வழங்கல்
ADDED : ஜன 23, 2024 04:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : தேத்தாம்பாக்கம் அரசு சி.பி.எஸ்.சி., தொடக்கப் பள்ளியின் வளர்ச்சிக்கு கிராம முக்கியஸ்தர்கள், சமூக ஆர்வலர்கள் தங்கள் சொந்த செலவில் தேவையான உபகரணங்களை வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில், புதுச்சேரியில் ஐ.ஆர்.பி.என்., தலைமைக் காவலராக பணியாற்றி வரும் ஆறுமுகம் பள்ளிக்கு டியூப் லைட்கள், மின்சாதன மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை தனது சொந்த செலவில்வழங்க, தலைமையாசிரியர் குமரன் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் சமூக சேவகர் ராமக்கிருஷ்ணன், பொதுப்பணித்துறை ஊழியர் வசந்த், வழக்கறிஞர் அன்பரசு, மாயக்கிருஷ்ணன், சுந்தர், சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

