ADDED : பிப் 02, 2024 03:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: சொக்கம்பட்டு ஜெயமங்கள துர்காம்பிகை கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.
நெட்டப்பாக்கம் அடுத்த சொக்கம்பட்டு - கரியமாணிக்கம் கிராமத்தில் ஜெயமங்கள துர்காம்பிகை கோவில் உள்ளது.
இக்கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தன.
தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

