
புதுச்சேரி : புதுச்சேரி சின்னாத்தா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண்களுக்கான சுகாதார மற்றும் சுகாதார பெட்டகம் வழங்குதல் தொடர்பாக பயிற்சி பட்டறை நடந்தது.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மற்றும் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் சாய் வர்கிஸ் வரவேற்றார்.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை துணை இயக்குனர் அமுதா சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார்.
முத்தியால்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அதிகாரி தனலட்சுமி, பெண்களின் சுகாதாரம் பற்றி விரிவாக விளக்கம் அளித்தார்.பெண்களின் சுகாதாரம் பற்றி பொம்மலாட்டம் கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், இக்னேஷியஸ் மேரி சபினா, பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

