ADDED : ஜன 14, 2024 04:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி செல்லப்பெருமாள் பேட்டையில் அமைந்துள்ள விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் சுவாமி விவேகானந்தரின் 161வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளியின் முதன்மை முதல்வர் பத்மா தலைமை தாங்கினார். முதல்வர் கீதா முன்னிலை வகித்தனர். விழாவில், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் விவேகானந்தரின் வாழ்க்கை நெறிமுறைகள் குறித்து பேசினர்.

