ADDED : மார் 26, 2025 03:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : இந்திரா நகர் அரசு துவக்கப்பள்ளி அருகே உள்ள பூத்துறை ரோட்டில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு பணியால், இன்று 26ம் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இன்று 26ம் தேதி காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை, குரு நகர், சிவாஜி நகர், பிரியதர்ஷினி நகர், இஸ்ரவேல் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது என, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.