/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நலத்திட்ட உதவிகள்: எம்.எல்.ஏ., வழங்கல்
/
நலத்திட்ட உதவிகள்: எம்.எல்.ஏ., வழங்கல்

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : முத்தியால்பேட்டை தொகுதியில் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை, 100 பேருக்கு பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., வழங்கினார்.
முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்தில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் மூலம், கணவனால் கைவிடப்பட்டவர்கள், கணவனை இழந்தவர்கள், முதிர் கன்னிகள் என மொத்தம், 50 பேருக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான அரசாணையை, பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., வழங்கினார்.
மேலும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த, 50 பேருக்கு சிவப்பு நிற உணவு பங்கீட்டு அட்டைகளை வழங்கினார். இதில் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

