sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நாய்களை கொன்றது யார்? போலீசார் விசாரணை

/

நாய்களை கொன்றது யார்? போலீசார் விசாரணை

நாய்களை கொன்றது யார்? போலீசார் விசாரணை

நாய்களை கொன்றது யார்? போலீசார் விசாரணை


ADDED : ஜன 10, 2024 01:46 AM

Google News

ADDED : ஜன 10, 2024 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம் : முதலியார்பேட்டை பகுதியில் தெரு நாய்களை கொன்ற சம்பவம் பற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முதலியார்பேட்டை பகுதியில் தெரு நாய்களுக்கு உணவு கொடுத்த பொதுமக்கள் அந்த பகுதியில் சுற்றி திரிந்த நாய்களை காணவில்லை என, கூறிவந்தனர். இந்நிலையில், மரப்பாலம் நுாறடி சாலை ரயில்வே மேம்பாலம் கீழே தெரு நாய்கள் பல இறந்து கிடந்தன. சில இடங்களில் நாய்களை கொன்று புதைக்கப்பட்டும், சில நாய்கள் சாக்கு மூட்டைகளிலும், சில நாய்கள் அட்டை பெட்டிகளில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தன.

நாய்களின் உடல்கள் அழுகிய நிலையில், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதுபற்றி தகவலறிந்த தெரு நாய்களை வளர்த்த முதலியார்பேட்டையை சேர்ந்த ஒருவர் நேற்று முதலியார்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

அதில், நாய்களை கொடூரமாக கொன்று, சாக்குபைகள், அட்டைபெட்டிகளில் வைத்து வீசியுள்ளனர். சில நாய்களை கொன்று புதைத்தள்ளனர். இச்சம்பத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூறியுள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us