sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கரிக்கலாம்பாக்கத்தில் நோயாளிகள் தவிப்பு ஏம்பலம் தொகுதி எம்.எல்.ஏ., கவனிப்பாரா?

/

கரிக்கலாம்பாக்கத்தில் நோயாளிகள் தவிப்பு ஏம்பலம் தொகுதி எம்.எல்.ஏ., கவனிப்பாரா?

கரிக்கலாம்பாக்கத்தில் நோயாளிகள் தவிப்பு ஏம்பலம் தொகுதி எம்.எல்.ஏ., கவனிப்பாரா?

கரிக்கலாம்பாக்கத்தில் நோயாளிகள் தவிப்பு ஏம்பலம் தொகுதி எம்.எல்.ஏ., கவனிப்பாரா?


ADDED : பிப் 01, 2024 11:22 PM

Google News

ADDED : பிப் 01, 2024 11:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கரிக்கலாம்பாக்கத்தில் டாக்டர்கள் குடியிருப்பு பழுதடைந்துள்ளதால், நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏம்பலம் தொகுதியில் உள்ள கரிக்கலாம்பாக்கத்தில் சமுதாய நல மையம் அமைந்துள்ளது.

இங்கு, கரிக்கலாம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர்.

இங்கு பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் தங்கி பணிபுரிவதற்காக, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன், கரிக்கலாம்பாக்கம் சமுதாய மையம் அருகே இரண்டு கட்டடங்களாக குடியிருப்பு கட்டப்பட்டு திறப்பு விழா நடத்தப்பட்டது.

சில ஆண்டுகளிலேயே போதிய பராமரிப்பு இல்லாததால், மழை காலத்தில் கட்டடத்தின் மேல்தளத்தில் இருந்து மழை நீர் கசிய துவங்கியது. மேலும், கட்டடமும் பல இடங்களில் பழுதடைந்து இடிந்து விழ ஆரம்பித்தது. இதனால், குடியிருந்த டாக்டர்களும், செவியர்கள் மற்றும் ஊழியர்களும், குடியிருப்பை காலி செய்து விட்டனர். ஓரிருவர் மட்டுமே பெயருக்கு தங்கி உள்ளனர்.

தற்போது டாக்டர்கள் குடியிருப்பு, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி விட்டது.

இரவு நேரத்தில் மது அருந்துவது, விபசாரம் உள்ளிட்ட பல குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனை, போலீசாரும் கண்டு கொள்வதில்லை.

குடியிருப்பில் டாக்டர்கள் தங்க தயங்குவதால், நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.

உரிய நேரத்தில் சிகிச்சை கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதனை, தொகுதியின் எம்.எல்.ஏ., லட்சுமிகாந்தனும் கண்டு கொள்வதில்லை. இதனால், தொகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us