sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி

/

ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி

ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி

ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: கடலுார் மாவட்டம், துாக்கணாம்பாக்கம் அடுத்த குட்டியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருஞானசம்பந்தம், 42; கூலி தொழிலாளி. இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

குடிப்பழக்கம் உடைய திருஞானசம்பந்தம், நேற்று முன்தினம் வெளியே சென்றவர் இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் அவரது மனைவி, உறவினர்கள் பல இடங்களில் தேடினர்.

கரையாம்புத்துார் அடுத்த கடுவனுார் பகுதி சாராயக்கடை பின்புறம் உள்ள ஏரியில் மூழ்கி திருஞான சம்பந்தம் இறந்து கிடப்பதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, கரையாம்புத்துார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி, மருத்துவமனை அனுப்பினர்.

இதுகுறித்து வழக்குப் பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar