sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

உலகத் தாய் மொழி நாள் மொழி உணர்வுப் பேரணி

/

உலகத் தாய் மொழி நாள் மொழி உணர்வுப் பேரணி

உலகத் தாய் மொழி நாள் மொழி உணர்வுப் பேரணி

உலகத் தாய் மொழி நாள் மொழி உணர்வுப் பேரணி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: உலகத் தாய் மொழி நாளை முன்னிட்டு, மொழி உணர்வுப் பேரணிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ம் தேதி, உலகத் தாய் மொழி நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, இராதே அறக்கட்டளை, இந்தியப் பொறியாளர் கழகத்தின் புதுச்சேரி மாநில மையம் மற்றும் தமிழ் அமைப்புகள் சார்பில் மொழி உணர்வுப் பேரணி இன்று மாலை 4:00 மணிக்கு நடக்கிறது.

மறைமலை அடிகள் சாலையில் உள்ள வெங்கடசுப்பா ரெட்டியார் சதுக்கத்தில் பேரணி துவங்குகிறது. பேரணியை, கலைப் பண்பாட்டுத் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.பேரணியில், தமிழறிஞர்களின் படங்களுடன் முத்துரத்தின அரங்கம் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர். தமிழறிஞர்கள், இலக்கிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு 'தமிழில் தலைப்பெழுத்திடுவோம்', 'தமிழில் கையொப்பமிடுவோம்' போன்ற கோஷங்களுடன் பேரணியாக செல்கின்றனர்.

மறைமலை அடிகள் சாலை, அண்ணா சாலை, நேரு வீதி, மாதா கோவில் தெரு வழியாக செயிண்ட் தான்ழ் வீதியில் பேரணி நிறைவடைகிறது.மொழி உணர்வுப் பேரணிக்கான ஏற்பாடுகளை, கவிஞர் இராதே மற்றும் தமிழறிஞர்கள் செய்துள்ளனர்.




    • Dinamalar Events


    Dinamalar