sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தாம்பரம் மாநகராட்சி கூட்டம்; கேள்வி எழுப்ப அ.தி.மு.க., முடிவு

/

தாம்பரம் மாநகராட்சி கூட்டம்; கேள்வி எழுப்ப அ.தி.மு.க., முடிவு

தாம்பரம் மாநகராட்சி கூட்டம்; கேள்வி எழுப்ப அ.தி.மு.க., முடிவு

தாம்பரம் மாநகராட்சி கூட்டம்; கேள்வி எழுப்ப அ.தி.மு.க., முடிவு


ADDED : ஜூலை 29, 2024 10:06 PM

Google News

ADDED : ஜூலை 29, 2024 10:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம் : தாம்பரம் மாநகராட்சி கூட்டம் இன்று காலை நடக்கிறது. இதில், மேயரின் செயல்பாடுகள் குறித்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கேள்வி எழுப்ப முடிவு செய்துள்ளனர்.

தாம்பரம் மாநகராட்சி கூட்டம், கடந்த பிப்., 29ம் தேதி நடந்தது. அதன் பின், லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதால், மாநகராட்சி கூட்டத்தை நடத்த முடியவில்லை.

தேர்தல் முடிந்த பிறகும் நடத்தாததால், ஐந்து மண்டலங்களிலும் சாலை, குடிநீர் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், மாநகராட்சி கூட்டம் இன்று காலை, 10:30 மணிக்கு நடக்கிறது.

ஐந்து மண்டலங்களிலும், இரண்டரை ஆண்டுகளாக மக்கள் பணிகள் முறையாக நடக்கவில்லை.

தி.மு.க., அரசு மீது, மக்கள் வெறுப்பில் உள்ளனர். மேயரின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை.

அவர், மக்கள் பணியில் அக்கறை காட்டுவதே இல்லை உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி, இக்கூட்டத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கருப்பு சட்டை அணிந்து, கேள்வி எழுப்ப முடிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us