/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மொபைல் போன் தவணை கட்டாததால் அ.தி.மு.க., பிரமுகர் மகனை கொன்றோம் கைதான நண்பர்கள் போலீசில் தகவல்
/
மொபைல் போன் தவணை கட்டாததால் அ.தி.மு.க., பிரமுகர் மகனை கொன்றோம் கைதான நண்பர்கள் போலீசில் தகவல்
மொபைல் போன் தவணை கட்டாததால் அ.தி.மு.க., பிரமுகர் மகனை கொன்றோம் கைதான நண்பர்கள் போலீசில் தகவல்
மொபைல் போன் தவணை கட்டாததால் அ.தி.மு.க., பிரமுகர் மகனை கொன்றோம் கைதான நண்பர்கள் போலீசில் தகவல்
ADDED : ஜன 09, 2024 10:45 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த காரைப்பேட்டையைச் சேர்ந்தவர் ஜேக்கப். அ.தி.மு.க., காஞ்சி கிளை செயலர். இவருக்கு மூன்று மகன்கள்.
மூத்த மகன் ஆனந்த், 31, பட்ட படிப்பு முடித்துவிட்டு, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகன லைசென்ஸ், எப்.சி., புதுப்பித்தல் போன்ற பணிகளை, 'கமிஷன்' அடிப்படையில் செய்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் காலை, காரைப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே, மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
காஞ்சி தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, அவரது நண்பர்கள் நான்கு பேரை பிடித்து விசாரித்ததில், ஆனந்தை வெட்டிக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, பெரிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த குணரஞ்சன், 29, ஓரிக்கையைச் சேர்ந்த கவுதமன், 35, செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த பரத், 23, கூரம் கிராமத்தைச் சேர்ந்த பிரபுதேவா, 32, ஆகிய நான்கு பேரை கைது செய்து, காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது:
கொலை செய்யப்பட்ட ஆனந்த் மற்றும் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் நண்பர்கள். இதில், ஆனந்திற்கு புதிய மொபைல்போன் ஒன்றை, கவுதமன் மாத தவணையில் வாங்கிக் கொடுத்துள்ளார்.
மாத தவணையை ஆனந்த் முறையாக செலுத்தாததால், இருவருக்கும் இடையே பிரச்னை இருந்துள்ளது.
இந்நிலையில், 7ம் தேதி இரவு, அனைவரும் மது அருந்திய நிலையில், மொபைல்போன் பிரச்னை மற்றும் முன்விரோதம் உள்ளிட்ட காரணங்களால், வாக்குவாதம் ஏற்பட்டது. இதனாலேயே, நான்கு பேரும் சேர்ந்து ஆனந்தை கொலை செய்துள்ளனர்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

