ADDED : ஜூன் 14, 2025 09:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர்:செங்கல்பட்டு அடுத்த பாலுார் கிராமத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக பாலுார் போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்தன.
இதையடுத்து, பாலுார் கிராமத்தில் உமாராணி, 70, என்ற மூதாட்டி வீட்டில் சோதனை நடத்தியபோது மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது.
இதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார் அவரது வீட்டில் இருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.