sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

குழந்தை கழுத்தில் கத்தரிக்கோல் வைத்து மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மிரட்டல்: பவுஞ்சூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு

/

குழந்தை கழுத்தில் கத்தரிக்கோல் வைத்து மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மிரட்டல்: பவுஞ்சூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு

குழந்தை கழுத்தில் கத்தரிக்கோல் வைத்து மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மிரட்டல்: பவுஞ்சூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு

குழந்தை கழுத்தில் கத்தரிக்கோல் வைத்து மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மிரட்டல்: பவுஞ்சூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு


ADDED : செப் 19, 2025 02:23 AM

Google News

ADDED : செப் 19, 2025 02:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவுஞ்சூர்:பவுஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், சிகிச்சைக்கு வந்த 7 வயது குழந்தையின் கழுத்தில் கத்தரிக்கோலை வைத்து மிரட்டல் விடுத்தது, பரபரப்பை ஏற்படுத்தியது.

பவுஞ்சூர் அடுத்த மேலகண்டை பகுதியைச் சேர்ந்த தமிழரசி, 30, என்பவரது மகள் யாஷிகா, 7.

இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், நேற்று மதியம் 12:00 மணியளவில், பவுஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, தாய் தமிழரசி அழைத்துச் சென்றார்.

அங்கு, மருத்துவரை சந்திக்க சென்ற போது, பின்தொடர்ந்து வந்த நபர் ஒருவர் திடீரென, அங்குள்ள மேஜை மீது இருந்த கத்தரிக்கோலை எடுத்து, யாஷிகாவின் கழுத்தில் வைத்து,'குழந்தையை யாராவது பிடுங்க வந்தால், குத்தி விடுவேன்' என, மிரட்டல் விடுத்துள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள், குழந்தையை மீட்க முயன்றனர்.ஆனால், முடியவில்லை.

இதுகுறித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த அணைக்கட்டு போலீசார், சாமர்த்தியமாக செயல்பட்டு அந்த நபரிடம் இருந்து குழந்தையை மீட்டனர்.

பின், அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

இதில் அவர், செய்யூர் அடுத்த மருதேரி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன், 29, என்பதும், கடந்த ஐந்து ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரிந்தது.

பின், அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து, மணிகண்டனை மனநல காப்பகத்தில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்ததாக, போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us