sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கண்டிகை - வேங்கடமங்கலம் சாலை மோசம் நாற்று நட தயாராகி வரும் வாகன ஓட்டிகள்

/

கண்டிகை - வேங்கடமங்கலம் சாலை மோசம் நாற்று நட தயாராகி வரும் வாகன ஓட்டிகள்

கண்டிகை - வேங்கடமங்கலம் சாலை மோசம் நாற்று நட தயாராகி வரும் வாகன ஓட்டிகள்

கண்டிகை - வேங்கடமங்கலம் சாலை மோசம் நாற்று நட தயாராகி வரும் வாகன ஓட்டிகள்


ADDED : செப் 23, 2025 12:21 AM

Google News

ADDED : செப் 23, 2025 12:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டிகை:கண்டிகை -- வேங்கடமங்கலம்- இடையிலான பிரதான சாலை நடக்கவே லாயக்கற்ற நிலையில் உள்ளதால், சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் - கேளம்பாக்கம் பிரதான சாலையில், கண்டிகை சந்திப்பில் இருந்து வேங்கடமங்கலம் செல்லும் பிரதான சாலை தொடங்குகிறது. இந்த சாலை, காட்டாங்கொளத்துார் ஒன்றியம் கட்டுப்பாட்டில் உள்ளது.

வேங்கடமங்கலம், ரத்தினமங்கலம், அகரம்தென், சேலையூர் மற்றும் சுற்றியுள்ள 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

30 அடி அகலம் கொண்ட இந்த பிரதான சாலை, கடந்த 10 ஆண்டுகளாக புனரமைக்கப்படவில்லை. இதனால், கடுமையாக சேதமடைந்து, பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

தவிர, சாலை நெடுகிலும் சிறு கற்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதால், இருசக்கர வாகனங்களின் 'டயர்கள்' அடிக்கடி பஞ்சராகின்றன.

இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:

நடப்பதற்கே லாயக்கற்ற நிலையில், படுமோசமாக உள்ள இந்த சாலையில் பள்ளி வாகனங்கள், நோயாளிகளை அழைத்துச் செல்லும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் பிற வாகனங்கள் மிகுந்த இடையூறுகளுடன் பயணிக்கின்றன.

சாலை பள்ளங்களில் மழை நீர் தேங்கி, சகதியாக மாறிவிட்டதால், ஒவ்வொரு வாகனமும் அதிக 'ரிஸ்க்' எடுத்து பயணிக்கும் நிலை உருவாகி உள்ளது.

சாலையை புனரமைக்க கோரி உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், நடவடிக்கை இல்லை.

இந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும். இல்லாவிட்டால், பொதுமக்களுடன் சேர்ந்து, நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us