/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
துாங்கி கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிப்பு
/
துாங்கி கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிப்பு
ADDED : பிப் 01, 2024 10:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த செங்குன்றம் பகுதியை சேர்ந்த தனகோட்டி என்பவர் மனைவி குமுதா, 27. இவர், நேற்று முன்தினம் அதிகாலை, வீட்டில் துாங்கிக்கொண்டு இருந்தார்.
அப்போது, மின்சாரத்தை துண்டித்து விட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், குமுதா கழுத்தில் இருந்த 2 சவரன் தங்க தாலிச்செயினை பறித்துச் சென்றனர்.
இது குறித்து, குமுதா மறைமலை நகர் போலீசில் அளித்த புகாரின்படி, போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

