/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எழும்பூரில் 820 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
/
எழும்பூரில் 820 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ADDED : ஜூன் 25, 2025 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில், 820 கிலோ ரேஷன் அரிசியை ரயில்வே பாதுகாப்பு படை பறிமுதல் செய்தனர்.
எழும்பூர் ரயில் நிலைய நடைமேடைகளில், நேற்று முன்தினம் இரவு கேட்பாரற்று 41 அரிசி மூட்டைகள் இருந்தன. அவற்றை கைப்பற்றி ரயில்வே பாதுகாப்பு படையினர் ஆய்வு செய்ததில், 820 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. கைப்பற்றப்பட்ட அரிசி, குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. நடைமேடையில் ரேஷன் அரிசி வைத்து சென்றவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.