sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தலையில் கல்லை போட்டு வாலிபர் கொடூர கொலை

/

தலையில் கல்லை போட்டு வாலிபர் கொடூர கொலை

தலையில் கல்லை போட்டு வாலிபர் கொடூர கொலை

தலையில் கல்லை போட்டு வாலிபர் கொடூர கொலை


ADDED : பிப் 01, 2024 11:58 PM

Google News

ADDED : பிப் 01, 2024 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருங்களத்துார், தாம்பரம் அடுத்த பெருங்களத்துார், திருவள்ளுர் தெருவைச் சேர்ந்தவர் ஜீவா, 22. இவர், கானா பாடல் பாடி, மேளம் அடிக்கும் வேலை செய்து வந்தார்.

நேற்று காலை, புது பெருங்களத்துார் குண்டுமேடு சுடுகாட்டில், தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

தகவலறிந்து வந்த போலீசார், ஜீவாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

விசாரணையில் பெருங்களத்துார், குண்டுமேடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை, ஜீவா காதலித்து வந்துள்ளார். அப்பெண்ணுக்கு திருமணம் செய்ய, அவரது குடும்பத்தினர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது.

ஆனாலும் ஜீவாவும், அந்த பெண்ணும் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை பெருங்களத்துாரில், ஜீவாவும் அந்த பெண்ணும் பேசிக் கொண்டிருந்த போது, உறவினர்கள் அதைப் பார்த்து, அப்பெண்ணை அழைத்துச் சென்றுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஜீவா, நேற்று முன்தினம் இரவு, பல்லாவரத்தைச் சேர்ந்த நண்பர்கள் ஐந்து பேருடன் பெண்ணின் வீட்டிற்குச் சென்று, தகராறு செய்துள்ளார்.

அங்கு போலீசார் வந்ததும் மற்றவர்கள் தப்பிச் சென்ற நிலையில், ஜீவா மட்டும் பெண்ணின் உறவினர்களிடம் சிக்கியுள்ளார்.

அதன் பின், ஜீவாவை குண்டுமேடு சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று கட்டையால் தாக்கியும், தலையில் கல்லைப் போட்டும் கொலை செய்துள்ளனர்.

நேற்று காலை, பெண்ணின் சகோதரர்களான அஜித், 24, விஜய், 22, உள்ளிட்ட மூன்று பேர், காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

அவர்களை போலீசார் கைது செய்து, தொடர்ந்து விசாரிக்கின்றனர். இது தொடர்பாக, பீர்க்கன்காரணை போலீசார் வழக்கு பதிந்து, கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் சிலரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us