/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பல்லாவரத்தில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
பல்லாவரத்தில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 02, 2024 12:15 AM
பல்லாவரம், பட்டியலின பெண்ணை கொடூரமாக தாக்கியவர்கள் மீது, கண்துடைப்பு நடவடிக்கை நாடகத்தை அரங்கேற்றிய தி.மு.க., அரசை கண்டித்து, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், நேற்று காலை பல்லாவரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இதில், தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், படப்பையிலும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலர் சோமசுந்தரம், ஒன்றிய செயலர் பழனி உள்ளிட்ட கட்சியினர் பலர் பங்கேற்று தி.மு.க., அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பினர். இதில், பலர் பங்கேற்றனர்.

