sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த முயற்சி ரூ.52 கோடியில் மழைநீர் சேகரிப்பு திட்டம்

/

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த முயற்சி ரூ.52 கோடியில் மழைநீர் சேகரிப்பு திட்டம்

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த முயற்சி ரூ.52 கோடியில் மழைநீர் சேகரிப்பு திட்டம்

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த முயற்சி ரூ.52 கோடியில் மழைநீர் சேகரிப்பு திட்டம்


ADDED : மார் 26, 2025 12:51 AM

Google News

ADDED : மார் 26, 2025 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சட்டசபையில் அமைச்சர் நேரு வெளியிட்ட அறிவிப்பு:

* சென்னை மாநகராட்சி பள்ளிகளில் புதிய கட்டடங்கள் மற்றும் கூடுதல் வகுப்பறைகள், 75 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும்

* பாதுகாப்பாக நடைபாதைகளை பயன்படுத்தும் வகையில், வாகனம் சாரா போக்குவரத்து திட்டத்தில், பேருந்து தட சாலைகளில், 200 கி.மீ., நீளத்திற்கு, 200 கோடி ரூபாய் மதிப்பில் நடைபாதைகள் அமைக்கப்படும்

* வெள்ளத்தடுப்பு பணிகளின் ஒரு பகுதியாக, ஓட்டேரி நல்லா மற்றும் விருகம்பாக்கம் கால்வாய்கள், 95 கோடி ரூபாய் மதிப்பில், தடுப்பு சுவர் அமைத்து, குப்பை தேங்காமல் இருக்க பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படும்

* நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த, 52 கோடி ரூபாய் மதிப்பில் பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்படும்

* ஏரிகள், குளம் சீரமைத்து, அதன் கொள்ளவை அதிகரிக்கவும், சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்பை தவிர்க்கவும், 120 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படும்

* மாநகராட்சி பகுதிகளை பசுமையாக்கி இயற்கை சூழலை ஏற்படுத்த, 60 கோடி ரூபாய் மதிப்பில், 30 புதிய பூங்காக்கள் அமைக்கப்படும்

* அனைத்து மண்டலங்களிலும், 45 கோடி ரூபாய் மதிப்பில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும்

* மாநகராட்சி மயான பூமிகளில், 60 கோடி ரூபாய் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடைகள் அமைக்கப்படும்

* கள்ளிக்குப்பம், வில்லிவாக்கம், சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் இறைச்சி கூடங்கள், 60 கோடி ரூபாய் மதிப்பில், நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும்

* பொது மற்றும் தனியார் துறை பங்களிப்பு வாயிலாக, நவீன வசதிகளுடன் கூடிய உயர்தர வணிக வளாகங்கள் கட்டப்படும்

* சென்னையில் மைய பகுதிகளில், மிகவும் பழமையான கழிவுநீர் கட்டமைப்புகள், 740.37 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்படும்.

* புழலிலுள்ள பழைய, 30 கோடி லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், பொது மற்றும் தனியார் பங்களிப்புடன், 430.12 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்படும்

* அனைத்து கழிவுநீர் உந்து நிலையங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்ளில் அளவுமானிகள், 30 கோடி ரூபாய் மதிப்பில் பொருத்தப்படும்

* தாம்பரம் மாநகராட்சிக்கு வழங்கப்படும் குடிநீரின் தரத்தை மேம்படுத்தும் வகையில், 30 கோடி ரூபாயில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

***






      Dinamalar
      Follow us