sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கஞ்சா வழக்கு ஆந்திர வாலிபருக்கு ' 10 ஆண்டு '

/

கஞ்சா வழக்கு ஆந்திர வாலிபருக்கு ' 10 ஆண்டு '

கஞ்சா வழக்கு ஆந்திர வாலிபருக்கு ' 10 ஆண்டு '

கஞ்சா வழக்கு ஆந்திர வாலிபருக்கு ' 10 ஆண்டு '


ADDED : செப் 19, 2025 12:58 AM

Google News

ADDED : செப் 19, 2025 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, வண்ணாரப்பேட்டை அருகே கஞ்சா விற்ற வழக் கில் கைதான ஆந்திர மாநில வாலிபருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மின்ட் பேருந்து நிலைய பகுதியில், கடந்த 2022-ம் ஆண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மங்காராஜு, 32 என்பவரை, வண்ணாரப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

அப்போது, அவரிடம் இருந்து, 26 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை, சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி முன் நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, மங்காராஜு மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது என கூறி, அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us