sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

72 மாடுகளை ஏலம் விட ஆவடி மாநகராட்சி முடிவு அபராதம் செலுத்த தவறியதால் நடவடிக்கை

/

72 மாடுகளை ஏலம் விட ஆவடி மாநகராட்சி முடிவு அபராதம் செலுத்த தவறியதால் நடவடிக்கை

72 மாடுகளை ஏலம் விட ஆவடி மாநகராட்சி முடிவு அபராதம் செலுத்த தவறியதால் நடவடிக்கை

72 மாடுகளை ஏலம் விட ஆவடி மாநகராட்சி முடிவு அபராதம் செலுத்த தவறியதால் நடவடிக்கை


ADDED : ஜூலை 02, 2025 12:22 AM

Google News

ADDED : ஜூலை 02, 2025 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, ஆவடி மாநகராட்சியில், சாலையில் பறிமுதல் செய்யப்பட்ட மாடுகளில், 72 மாடுகள் ஏலம் விடப்பட உள்ளது.

ஆவடி மாநகராட்சி ஊழியர்கள், தனியார் அமைப்புடன் சேர்ந்து, மே 23ம் தேதி முதல் மாடு பிடிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜூன் 26ம் தேதி வரை, சி.டி.எச் சாலை, தமிழ்நாடு வீட்டு வசதி சாலை, கோவில்பதாகை, அண்ணனுார், காமராஜர் நகர், திருமுல்லைவாயில் உள்ளிட்ட பகுதிகளில், ஒன்பது முறை மாடுகள் பிடிக்கப்பட்டன.

இதில், கன்றுக்குட்டி உட்பட 92 மாடுகள் பிடிக்கப்பட்டு, காஞ்சிபுரத்தில் உள்ள கோசாலைக்கு அனுப்பி, அங்கு பராமரிக்கப்பட்டு வந்தன.

இதில், அபராதம் செலுத்திய 20 மாடுகள் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டன. இதன் வாயிலாக, 1.20 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் 72 மாடுகளுக்கான அபராதம் செலுத்தப்படவில்லை. அவை, அடுத்த வாரம் ஏலம் விடப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்குள் அபராதம் செலுத்தி மாடுகளை மீட்க, உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us