sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

யு - 25 மாநில கிரிக்கெட் பைனலில் செங்கை அணி

/

யு - 25 மாநில கிரிக்கெட் பைனலில் செங்கை அணி

யு - 25 மாநில கிரிக்கெட் பைனலில் செங்கை அணி

யு - 25 மாநில கிரிக்கெட் பைனலில் செங்கை அணி


ADDED : செப் 01, 2025 12:55 AM

Google News

ADDED : செப் 01, 2025 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:மாநில கிரிக்கெட் போட்டியில், செங்கல்பட்டு அணி வலுவான வெற்றியை பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின், மாவட்டங்களுக்கு இடையிலான யு - -25 போட்டி, பல்வேறு மாவட்டங்களில் நடந்து வருகிறது. நேற்று திருநெல்வேலியில் நடந்த இரண்டாம் அரையிறுதி போட்டியில், செங்கல்பட்டு மற்றும் சேலம் அணிகள் எதிர்கொண்டன.

முதலில் பேட்டிங் செய்த செங்கல்பட்டு அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு, 285 ரன்கள் குவித்தது. அணியின் வீரர் ஆர்யன் சஞ்சய் தாக்கரே, 97 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆதித்யா வரதராஜன் - 56, ஆர்.எஸ்.மோகித் ஹரிஹரன் - 49, விஞ்ஞேஷ் எஸ்.அய்யர் - 47 ரன்களுடன் சிறப்பான பங்களிப்பு செய்தனர்.

வெற்றி இலக்கை துரத்திய சேலம் அணி, 30.2 ஓவர்களில், 95 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. சேலத்தின் சிவஜனா மட்டும் 45 ரன்கள் எடுத்தார். செங்கல்பட்டு பந்து வீச்சில், கே.கெவின் ரொமாரியோ 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றியுடன், செங்கல்பட்டு அணி, நாளை திருநெல்வேலியில் நடைபெறும் இறுதிப் போட்டியில், திருவள்ளூர் அணியை எதிர்கொள்ள உள்ளது.






      Dinamalar
      Follow us