/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
2.46 கிலோ தங்கம் கையாடல் பிரபல ஜுவல்லரி ஆசாரி கைது
/
2.46 கிலோ தங்கம் கையாடல் பிரபல ஜுவல்லரி ஆசாரி கைது
2.46 கிலோ தங்கம் கையாடல் பிரபல ஜுவல்லரி ஆசாரி கைது
2.46 கிலோ தங்கம் கையாடல் பிரபல ஜுவல்லரி ஆசாரி கைது
ADDED : ஜன 14, 2024 02:34 AM
சென்னை, தி.நகர், உஸ்மான் சாலையில் பிரபல ஜுவல்லரி உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக, நந்தனம் 3வது குறுக்கு தெருவைச் சேர்ந்த பிரபீர் ஷேக், 38, என்ற நகை ஆசாரி ஒப்பந்த அடிப்படையில் பணி செய்தார்.
இவரிடம் நகை செய்வதற்காக அளிக்கப்பட்ட தங்கத்தில், 2 கிலோ 46 கிராம் 100 மில்லி எடையிலான தங்க கட்டியை கையாடல் செய்ததாக, நகைக்கடை மேலாளர் சத்தியநாராயணன், 48, மாம்பலம் காவல் நிலையத்தில், கடந்தாண்டு ஜூன் மாதம் புகார் அளித்துள்ளார்.
ஏற்கனவே, கடந்தாண்டு மார்ச் மாதம் வாடிக்கையாளர்கள் சரிசெய்ய கொடுத்த 347 கிராம் தங்க நகைகளை அடகு வைத்து மோசடி செய்ததாக, இதே தங்க நகை கடை சார்பில் பிரபீர் ஷேக் மீது புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக, பிரபீர் ஷேக் மற்றும் அடகு வைக்க உதவிய அவரது நண்பரான வியாசர்பாடியைச் சேர்ந்த பாலமுருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதன்பின் ஜாமினில் வெளி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், 2.46 கிலோ தங்க கட்டி கையாடல் செய்த புகார் குறித்து, பிரபீர் ஷேக்கை கைது செய்தனர்.

