sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரயில்வே கேரேஜில் தீ விபத்து இரு ஊழியருக்கு பலத்த காயம்

/

ரயில்வே கேரேஜில் தீ விபத்து இரு ஊழியருக்கு பலத்த காயம்

ரயில்வே கேரேஜில் தீ விபத்து இரு ஊழியருக்கு பலத்த காயம்

ரயில்வே கேரேஜில் தீ விபத்து இரு ஊழியருக்கு பலத்த காயம்


ADDED : செப் 26, 2025 12:52 AM

Google News

ADDED : செப் 26, 2025 12:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐ.சி.எப்., :ஐ.சி.எப்., அடுத்த பெரம்பூர் ரயில்வே கேரேஜில் ஏற்பட்ட தீ விபத்தில், இரு ஊழியர்கள் பலத்த காயமடைந்தனர்.

ஐ.சி.எப்., அடுத்த பெரம்பூர் பகுதியில், தெற்கு ரயில்வேக்கு சொந்தமான, 'வேகன் அண்டு ஒர்க்ஸ்' என்ற கேரேஜ் செயல்படுகிறது. இங்கு, பழைய ரயில்கள் பராமரிப்பு மற்றும் பழுது பார்க்கும் பணிகள் நடக்கின்றன. நேற்று மதியம், 'நியூ ஷெட்' பகுதியில், ஊழியர்கள் இருவர், ஒரே ரயில் பெட்டியில், 'டிங்கரிங்' மற்றும் 'பெயின்ட்' அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, 'டிங்கரிங்' தீப்பொறியானது, கீழே கிடந்த 'பெயின்ட்' தின்னர் மீது பட்டு, மளமளவென தீப்பிடிக்க துவங்கியது. அங்கிருந்த சக பணியாளர்கள், உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதில், ஊழியர்கள் கணேசன், காமராஜ் ஆகியோருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவர்கள், ஐ.சி.எப்., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரே நேரத்தில் இரு பணிகளில் ஈடுபட்டதால் விபத்து ஏற்பட்டதாக, ரயில்வே அதிகாரிகள் கூறினர். இதுகுறித்து, ஐ.சி.எப்., போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us
      Arattai