ADDED : ஜன 24, 2024 12:13 AM
சென்னை, சென்னை, திருவல்லிக்கேணி, எல்லீஸ் சாலை, சின்ன தம்பி தெருவில் வி.கே. தங்கும் விடுதி உள்ளது. நேற்று அதிகாலை அந்த விடுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டு, பெண் ஒருவரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
வழக்கு பதிவு செய்து, சேப்பாக்கம், முருகப்பா தெருவை சேர்ந்த விடுதி உரிமையாளர் ஸ்ரீகாந்த் பாபு, 57, கோட்டூர் புரம், அம்பேத்கர் நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பிரசாந்த், 23, அரியலூரை சேர்ந்த ரூம் பாய் மகாராஜன், 23 ஆகியோரை கைது செய்தனர்.
வில்லிவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ஆய்வு மேற்கொண்டனர். இதில், அயனாவரத்தைச் சேர்ந்த சரண்யா, 35 பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது.
நேற்று அவரை கைது செய்த போலீசார், அவரிடம் சிக்கிய, மூன்று பெண்களை மீட்டு அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

