/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் வீட்டு பணிப்பெண் தீக்குளித்து இறப்பேன் என மிரட்டல்
/
சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் வீட்டு பணிப்பெண் தீக்குளித்து இறப்பேன் என மிரட்டல்
சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் வீட்டு பணிப்பெண் தீக்குளித்து இறப்பேன் என மிரட்டல்
சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் வீட்டு பணிப்பெண் தீக்குளித்து இறப்பேன் என மிரட்டல்
ADDED : பிப் 02, 2024 07:28 AM
ஆழ்வார்பேட்டை,: உரிய நஷ்ட ஈடு தராவிட்டால் , சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் வீட்டு பணிப்பென் தீக்குளித்து இறப்பேன் என மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் அளிக்கபப்ட்டுளது.
சென்னை ஆழ்வார்பேட்டை, முராயஸ் கேட் ரோட்டை சேர்ந்தவர் தீன தயாளன், இவர் பிரபல சிலை கடத்தல் மன்னன். சில ஆண்டுகளுக்கு முன் இவர் இறந்து விட்டார்.
இவரது மகள் அபர்ணா,60, மருத்துவர். இவர்களது வீட்டில் கடந்த 36 ஆண்டுகளாக சைதாபேட்டை, வெங்கடாபுரத்தை சேர்ந்த கிருஷணகுமாரி,50 பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில், தீன தயாளன் இறந்ததால், அவரது மகள் அபர்ணா, வீட்டை விற்று வீட்டு கர்நாடகாவிற்கு செல்ல உள்ளார். இதனால் கிருஷ்ணகுமாரி வாழ்வாதாரம் கருதி. அவருக்கு அபர்ணா ரூ. 5 லட்சம் காசோலை வழங்கியதாக தெரிகிறது.
ஆனால், கிருஷ்ணகுமாரி தனக்கு இந்த பணம் போதாது, ரூ. 80 லட்சம் வேண்டும் என கூறி, நேற்று முன் தினம் அவர் மண்ணெணய் உடலில் ஊற்றி தீக்குளிக்க போவதாக மிரட்டியுள்ளார்.
இதையடுத்து அபர்ணா கிருஷ்ணகுமாரி பணம் கேட்டு மிரட்டுவதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

