sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மகளிடம் அத்துமீறியவருக்கு சாகும் வரை சிறை

/

மகளிடம் அத்துமீறியவருக்கு சாகும் வரை சிறை

மகளிடம் அத்துமீறியவருக்கு சாகும் வரை சிறை

மகளிடம் அத்துமீறியவருக்கு சாகும் வரை சிறை


ADDED : ஜன 14, 2024 12:16 AM

Google News

ADDED : ஜன 14, 2024 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை சென்னையை அடுத்த பெரவள்ளூரைச் சேர்ந்த தம்பதிக்கு, இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளை, 12 வயது முதல் எட்டு ஆண்டுகளாக, அவரது தந்தை பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்துள்ளார்.

தந்தையால் தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து, 2022ல் அந்தச் சிறுமி கடிதம் வாயிலாக, போலீசில் புகார் அளித்தார்.

பெரவள்ளூர் மகளிர் போலீசார் விசாரித்து சிறுமியின் தந்தை மற்றும் இதை மறைக்க முயன்ற தாயையும் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்

இந்த வழக்கு, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி முன் விசாரணைக்கு வந்தது. போலீசார் தரப்பில், அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜரானார்.

நீதிபதி பிறப்பித்த தீர்ப்பு:

குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும், சந்தேகத்துக்கு இடமின்றி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளன. முதல் குற்றவாளியான சிறுமியின் தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.

சிறுமியின் தாய்க்கு ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது சகோதரி ஆகிய இருவருக்கும், தலா 10 லட்சம் ரூபாயை, அரசு இழப்பீடாக வழங்க வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us