sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஒருங்கிணைந்த சேவை மையம் மாற்று திறனாளிகளுக்கு திறப்பு

/

ஒருங்கிணைந்த சேவை மையம் மாற்று திறனாளிகளுக்கு திறப்பு

ஒருங்கிணைந்த சேவை மையம் மாற்று திறனாளிகளுக்கு திறப்பு

ஒருங்கிணைந்த சேவை மையம் மாற்று திறனாளிகளுக்கு திறப்பு


ADDED : செப் 17, 2025 03:05 AM

Google News

ADDED : செப் 17, 2025 03:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருங்குடி,

மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையிலான விழுதுகள் சேவை மையம், பெருங்குடி நகர்ப்புற சுகாதார மையத்தில், நேற்று துவக்கப்பட்டது.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், மையத்தை துவக்கி வைத்து பேசியதாவது:

மாற்றுத் திறனாளிகளுக்கான நலதிட்டங்கள், அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கும் வகையில், உலக வங்கி நிதி உதவியுடன், தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

மாற்றுத் திறனாளி சான்றிதழ் பெற, வட்டாட்சியரை அணுகுவது, மருத்துவரை அணுகுவது என அலைந்து திரிய வேண்டி இருந்தது. நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மூலம், காலை சென்றால் பிற்பகலுக்குள் சான்றிதழ் கிடைக்கிறது.

சென்னை மாவட்டத்தில் உள்ள 15 மண்டலங்களில், பெருங்குடி மண்டலத்தில் முதன் முறையாக, மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைந்த மறு வாழ்வு மையம் துவங்கப்பட்டுள்ளது. ஒரு குடையின் கீழ் அனைத்து சேவைகளும் கிடைக்கும் வகையில், இம்மையம் துவங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில், சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, தென் சென்னை எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லுார் எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் உட்பட பலரும் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us